இலங்கைக்கு கிடைக்கவுள்ள 4 பில்லியன் அமெரிக்க டொலர்
நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி
இலங்கைக்கு நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி மிக விரைவில் கிடைக்கப்பெறும் என தான் நம்புவதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இலங்கை விடுத்த கோரிக்கை
இந்த கடன்கள் மிக விரைவில் கிடைக்கப்பெறும். இலங்கையினால் சீனாவிடம் கடனுதவி கோரப்பட்டதற்கு அமைவாகவே கடனுதவி வழங்கப்படவுள்ளது.
சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனை திருப்பி செலுத்த ஒரு பில்லியன் டொலரும், சீனாவிடமிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்காக 1.5 பில்லியன் ரூபா கடன் எல்லை வசதியும், 1.5 பில்லியன் பெறுமதியான கடன் பரிமாற்ற வசதி என்ற அடிப்படையில் குறித்த உதவி கிடைக்கப்பெறும்” என கூறியுள்ளார்.
