குருநாகலில் கோர விபத்து - பெண் உட்பட 4 பேர் பலி
Sri Lanka Police
Kurunegala
Accident
Death
By Thulsi
குருநாகல் (Kurunegala) பகுதியில் இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த கோர விபத்து இன்று (10) காலை குருநாகல் - தோரயாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஒரு பெண் உட்பட நான்கு பேர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கந்துருவெலவிலிருந்து இன்று அதிகாலை குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து தோராய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது மதுரு ஓயாவிலிருந்து கொழும்பு (Colombo) நோக்கி பயணித்த பேருந்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், விபத்தில் 25 பேர் காயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி