உரத்தில் பாரிய மோசடி- கண்டுபிடித்த விசேட அதிரடிப்படை - ஆறு பேர் கைது (படங்கள்)
அரசாங்கத்தினால் வழங்கப்படும் எம்ஓபி உரத்துடன் (பொட்டாசியம் சிவப்புத் தூள்) தரமற்ற உப்பை கலந்து மீண்டும் அரச பொதிகளில் பொதி செய்யும் மோசடியை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
நெடாவூர், அட்டபள்ளத்தில் உரத்தில் உப்பு கலக்கும் இடம் ஒன்று நேற்று முன்தினம் (24) திருக்கோவில் முகாம் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டது.
40 தொன் உரம்

அந்த இடத்தில் உப்பு கலந்த 38,650 கிலோ (சுமார் 40 தொன்) உரத்துடன் 06 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தேசிய உர செயலகத்திற்கு பொறுப்பான அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளரிடம் உர இருப்புடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சுற்றிவளைப்பு

அம்பாறை மாவட்ட அதிரடிப்படை முகாம் தளபதி எஸ் கே.கன்னங்கர உட்பட அதிகாரிகள் குழு. வலய கட்டளைத் தளபதி அம்பாறை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் மேற்பார்வையில் விஷேட அதிரடிப் படைத் தளபதி டி.ஐ.ஜி சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் உத்தரவு மற்றும் பணிப்புரைக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.