மண்டைதீவு படுகொலையின் 40 ஆண்டுகள் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 உறவினர்கள் படுகொலை
மண்டை தீவு படுகொலையின் 40 ஆவது ஆண்டு நினைவு நேற்றைய தினம்(10) குருநகர் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.
குருநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன நினைவு தூவியில் குருநகர் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
குருநகர் ஆலய பங்குத்தந்தை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மெழுகுவர்த்தி, தீபம் ஏற்றி மலர் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
வாளால் வெட்டிப் படுகொலை
1986 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பத்தாம் தேதி குருநகர் பகுதியில் இருந்து ஒரு படகில் 31 மீனவர்கள் கரைவலை மீன்பிடிப்புக்காக மண்ட தீவுக்கு சென்றிருந்தனர்.

இதன் போது அங்கு நின்ற கடற்படையினர் இவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டும் வாளால் வெட்டியும் படுகொலை செய்திருந்தனர்.
இதன்போது 31 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 31 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களே படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் உறவுகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 19 மணி நேரம் முன்