வடக்கு மாகாணத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 431 சுற்றுலா மையங்கள்
வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் தயாரிக்கப்பட்ட '2026 - 2030 வடக்கு சுற்றுலா அபிவிருத்தி மூலோபாயத் திட்டம்' இன்று வெள்ளிக்கிழமை (06.02.2026) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, திட்ட அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதோடு, அத்திட்டம் தொடர்பான விரிவான முன்னளிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், வவுனியாப் பல்கலைக்கழக வியாபாரக் கற்கைகள் பீடத்திடம் இத்திட்டத்தைத் தயாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
விசேட நிபுணர் குழு
அதற்கமைய, பீடாதிபதி கலாநிதி வை.நந்தகோபன் தலைமையிலான விசேட நிபுணர் குழுவினரால் இந்தத் தந்திரோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட விரிவான ஆய்வுகள் மற்றும் கலந்துரையாடல்களின் அடிப்படையில் மொத்தம் 431 சுற்றுலா மையங்கள் இத்திட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டம்: 5 வலயங்களாகப் பிரிக்கப்பட்டு 200 மையங்கள்.
முல்லைத்தீவு மாவட்டம்: 77 மையங்கள்.
கிளிநொச்சி மாவட்டம்: 56 மையங்கள்.
வவுனியா மாவட்டம்: 49 மையங்கள்.
மன்னார் மாவட்டம்: 49 மையங்கள்.
இவற்றில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னுரிமை அடிப்படையில் தலா 10 சுற்றுலா மையங்களும், மாகாண மட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் தலா 2 சுற்றுலா மையங்களுமாக மொத்தம் 10 மையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

