கடும் வறட்சி -ஏக்கர் கணக்கில் பாதிக்கப்படப்போகும் நெற்செய்கை
வறட்சி காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 45,000 ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
வறட்சி காரணமாக மேலும் பல மாவட்டங்களில் நெல் அறுவடை குறையும் அபாயம் காணப்படுவதாகவும் அமரவீர தெரிவித்தார்.
ஆபத்தில் நெற்செய்கை

தற்போதைய வறட்சி காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டம் மற்றும் பல மாவட்டங்களில் 45000 ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை ஆபத்தில் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் மாவட்ட விவசாயிகள் குழுவுடனான சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்படப்போகும் நெல் அறுவடை

இக்காரணங்களினால் இவ்வருட யால பருவத்தில் எதிர்பார்க்கப்படும் நெல் அறுவடை பாதிக்கப்படலாம் எனவும், தற்போது 95 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படும் ஒரு கிலோ நெல் எதிர்வரும் காலங்களில் 100 ரூபாவாக அதிகரிக்கலாம் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.