கார்னிக்கு கிடைத்த வெற்றி..! ட்ரம்ப் தொடங்கிய போரை வெல்ல உதவும்: கனடா பிரதமர்
கனடாவில் நடைபெற்ற தேர்தல்களில், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய வர்த்தகப் போரை மிகவும் திறம்படக் கையாள உதவும் என்று பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.
தேர்தலில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு வேட்பாளர்களும் "கனடாவிற்கு ஒரு தீர்க்கமான தருணத்தில் நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளனர்" என x தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இடைத்தேர்தல்கள்
டொராண்டோ பகுதியைச் சேர்ந்த ஸ்கார்பரோ சவுத்வெஸ்ட் மற்றும் யுனிவர்சிட்டி-ரோஸ்டேல் ஆகிய இரண்டு தொகுதிகளிலும், அத்துடன் கியூபெக்கின் டெர்போன் தொகுதியிலும் இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. டெர்போன் தொகுதியில் போட்டி மிகவும் கடுமையாக இருந்தது.

மூன்று இடைத்தேர்தல் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள அந்தக் கட்சி, நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
343 இடங்களை கொண்ட கனடா நாடாளுமன்றத்தில், லிபரல் கட்சி தற்போது 174 இடங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பான்மை
இதன் மூலம், அரசாங்கத்தை நிலைத்தன்மையுடன் முன்னெடுக்க தேவையான எளிய பெரும்பான்மையை கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.

"இது கனடாவிற்கு ஒரு தீர்க்கமான தருணம் — இதற்குத் தீவிரமான தலைமை, ஒரு வலுவான பொருளாதாரத் திட்டம், மற்றும் ஒரு சிறந்த எதிர்காலத்தைக் கட்டமைக்க அனைத்துப் பின்னணியிலிருந்தும் தலைவர்கள் முன்வர வேண்டும்," என்று லிபரல் கட்சி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |