ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்
இந்த வருடத்தின் ஜூலை மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 48,300 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூலை மாதத்தின் முதல் எட்டு நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 10,153 ஆகும்.
சுற்றுலாப் பயணிகள்
அதன்படி, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,860 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 3,310 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 3,181 சுற்றுலாப் பயணிகளும், பிராஸ்சிலிருந்து 2,335 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 2,153 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூலை மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,216,344 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
