ஜப்பானில் கத்திக்குத்து தாக்குதல் - 15 பேர் காயம்
ஜப்பான் (Japan) தொழிற்சாலையில் இடம்பெற்ற கத்தி தாக்குதலில் 15 பேர் காயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று (26.12.2025) வெள்ளிக்கிழமை ஜப்பான் தலைநகர் டோக்கியோ - மிஷிமா நகரிலுள்ள வாகன டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வாகன டயர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த 38 வயதான ஊழியர் திடிரென அங்குள்ள அனைவர் மீதும் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார்.
காவல்துறை விசாரணை
தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த சக ஊழியர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

இந்த கத்திக்குத்து தாக்குதலில் 15 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
கத்தியால் குத்தப்பட்டவர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் மேலதிக விவரங்கள் கிடைக்கவில்லை என்று தீயணைப்புத் துறை அசோசியேட்டட் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது.
மேலும், கத்திக்குத்து தாக்குதல் நடத்திய ஊழியரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |