2025 இல் இலங்கைக்கு வந்து குவிந்த 5 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்
2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து, இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) வெளியிட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 5 ஆம் திகதி வரை 530,746 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக சுற்றுலாப் பயணிகள்
மேலும் இந்த மாதத்தின் முதல் 5 நாட்களில் மட்டும் 37,768 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் இந்தியா, ரஸ்யா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவானோர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து 84,476 சுற்றுலாப் பயணிகளும், ரஸ்யாவிலிருந்து 70,159 சுற்றுலாப் பயணிகளும், பிரித்தானியாவிலிருந்து 51,105 சுற்றுலாப் பயணிகளும், ஜேர்மனியிலிருந்து 35,664 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 30,700 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்