சிறையில் இருக்கதயாராக இருங்கள் : ஜனாதிபதி அநுரவை மிரட்டும் கம்மன்பில
தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 2029 இல் ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய உடனேயே அவருக்கு எதிராக ஒரு குற்றவியல் வழக்குத் தொடரப்படும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
“2016 இல், தற்போதைய சபைத் தலைவர் அமைச்சர் பிமல், வெள்ளம் ஒரு இயற்கை பேரழிவாக இருந்தாலும், அதனால் ஏற்படும் துன்பங்களை நீக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று கூறினார். 2024 ஜனாதிபதித் தேர்தல் மேடையில், வெள்ளக் கட்டுப்பாட்டை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்ய முடியும், ஆனால் அவ்வாறு செய்யாதது கொலை, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதைச் செய்வோம் என்று கூறினார்.
ஜனாதிபதி மீது வழக்குத் தொடரலாம்
வெள்ளத்தின் தீவிரத்தை அறிந்தும் அவர் அதைச் செய்யவில்லை. எனவே, ஜனாதிபதி மீது குற்றவியல் அலட்சியத்திற்காக வழக்குத் தொடரலாம்.ஆனால் இப்போது அவருக்கு ஜனாதிபதி விலக்கு இருப்பதால் அவர் மீது வழக்குத் தொடர முடியாது.

ஆனால் 2029 இல் அவர் ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறிய பிறகு, அவர் மீது குற்றவியல் அலட்சியத்திற்காக வழக்குத் தொடரப்படும். அவரது குற்றத்தை நிரூபிக்க எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன.
ஏன் பொய் சொன்னேன் என சிந்திக்க வாய்ப்பளிப்போம்
எனவே, 2023 முதல் 2035 வரை சிறையில் அமர்ந்து நான் ஏன் இவ்வளவு பொய் சொன்னேன் என சிந்திக்க உங்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். என்றார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 9 மணி நேரம் முன்