மனித உரிமை பேரவை கரிசனையை மீண்டும் புறந்தள்ளிய சிறிலங்கா

United Nations Sri Lanka
By Beulah Sep 11, 2023 04:21 PM GMT
Report

ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கையிடலுக்குப் பின்னர் இந்த அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய நாடு என்ற வகையில் சிறிலங்கா பிரதிநிதி ஹிமாலி அருணதிலக உரையாற்றிய போது வழமை போலவே மனித உரிமை பேரவையின் விமர்சனங்களை நிராகரித்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 மற்றும் 51/1 ஆகிய தீர்மானங்களை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் நிராகரித்திருந்தது.

சிறிலங்கா பிரதிநிதி ஹிமாலி அருணதிலக ஆற்றிய உரையின் அடிப்படையில்,

பொறுப்புக்கூறலே இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் : ஜெனிவா அமர்வில் வலுவான அறிக்கை

பொறுப்புக்கூறலே இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் : ஜெனிவா அமர்வில் வலுவான அறிக்கை

துருவப்படுத்தும் முயற்சி

”குறித்த நடவடிக்கை பொறுப்புக்கூறல் தொடர்பான திட்டங்களுக்கு வழிவகுத்திருந்தது. அத்துடன், குறித்த தீர்மானங்களின் எழுத்து மூல அறிக்கைகளையும் அதன் முன்மொழிவுகளையும் நாம் நிராகரிக்கிறோம்.

மனித உரிமை பேரவை கரிசனையை மீண்டும் புறந்தள்ளிய சிறிலங்கா | 54Th Regular Session Human Rights Council Himali

இலங்கையின் உண்மையான நிலை குறித்த தீர்மானங்களில் பிரதிபலிக்கப்படவில்லை. இந்த தீர்மானங்களுக்கு ஆதரவாக சில நாடுகள் வாக்களித்திருந்த நிலையில் சில நிராகரித்திருந்தன.

ஏற்றுக்கொள்ள முடியாத சில காரணங்களை அடிப்படையாக கொண்டு குறித்த நாடுகள் மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டிருந்தன.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 60/251 தீர்மானங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் அமைந்துள்ளன.

இந்த தீர்மானங்கள் இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் துருவப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன. இந்த தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வரவு செலவு திட்ட தாக்கங்கள் குறித்து பல நாடுகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

இலங்கை ஆதரவு அளிக்காது

இவ்வாறான விடயங்கள் பயனற்றவை என சிறிலங்கா அரசாங்கம் பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தன.

மனித உரிமை பேரவை கரிசனையை மீண்டும் புறந்தள்ளிய சிறிலங்கா | 54Th Regular Session Human Rights Council Himali

இதனடிப்படையில், இலங்கை குறித்த தீர்மானத்துக்கு ஆதரவளிக்காது. இதனை தவிர்த்த பேரவையின் ஏனைய பயனுள்ள செயல்பாடுகளுக்கு இலங்கை ஆதரவளிக்கும்.

மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் உறுதியான முன்னேற்றங்களை அடைய ஸ்ரீலங்கா அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது.

உள்நாட்டு நிறுவனங்கள் ஊடாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும். நல்லிணக்கம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கம் குறித்தும் அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த ஒகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம்

வடக்கு மற்றும் கிழக்கில் தொடரும் காணி பிரச்சனைகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பிலும் அவர் கூறியிருந்தார்.

மனித உரிமை பேரவை கரிசனையை மீண்டும் புறந்தள்ளிய சிறிலங்கா | 54Th Regular Session Human Rights Council Himali

இந்த விடயங்கள் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சர்வகட்சி மாநாடும் நடத்தப்பட்டிருந்தது.

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் நடைமுறை பாரிய உதவியாக அமைந்துள்ளது.

சுதந்திர உள்நாட்டு பொறிமுறை

சுதந்திர உள்நாட்டு பொறிமுறையின் ஊடாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான அலுவலகத்தின் செயல்பாடுளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மனித உரிமை பேரவை கரிசனையை மீண்டும் புறந்தள்ளிய சிறிலங்கா | 54Th Regular Session Human Rights Council Himali

உண்மை மற்றும் நல்லிணகத்துக்கான பொறிமுறையின் தற்காலிக செயலகம் தற்போது நிறுவப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை தொடர்பில் நாம் முன்வைத்த காரணங்களுக்கு சமமான அவதானம் செலுத்தப்படுமென நம்புகிறோம்.

உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகள் தொடர்பில் சர்வதேச கடப்பாடுகளுக்கு இணங்க இலங்கை தொடர்ந்து ஐநாவுடன் இணைந்து செயல்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
நன்றி நவிலல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025