வடக்கில் 5940 ஏக்கர்களில் நுழையப் போகும் இந்தியாவும் சீனாவும்..!
கடந்த நாட்களில் ஒரு பெரும் பேசுபொருளாக இருந்து ஒரு பெரும் பிராயத்தனத்தின் பின் பின்வாங்கச் செய்யப்பட்ட அரசின் வடக்கு 5941 ஏக்கர் நில சுவீகரிப்புத் திட்டம் கைவிடப்பட்டதாகவே நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் அது சட்ட ரீதியாக பின்வாங்கப்படவில்லை என்பதும் குறித்த வர்த்தமானி மீளெடுக்கப்படவில்லை என்பதும் அநுர அரசின் மூன்றுமாத காலக்கெடுவை மக்களின் எதிர்ப்பின்றி கடந்து விடுகின்ற நோக்கமே என்பது இப்போது தெளிவாகி வருகிறது.
அரச தரப்பு ஒரு வலுவான காரணம் இல்லாமல் மேற்கொள்ளும் இந்த சுவீகரிப்புத்திட்டம் வடக்கில் ஒரு சிங்கள குடியேற்றத்திற்கான முனைப்பாகவோ அல்லது இந்தியா சீனா போன்ற நாடுகளுக்கு தாரைவார்க்கும் ஒரு திட்டமாக இருக்கலாம் என்பதே இப்போதையை ஐயப்பாடு.
இந்த விவகாரத்தில் அரசு மறைத்து வைத்து நகர்த்தும் காய்கள் தொடர்பாகவும் இதன் பிண்ண்ணியில் வடக்கு தமிழ் சமூகம் எதிர்கொள்ளப்போகும் பேராபத்து தொடர்பிலும் ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
