இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து : 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு
எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எல்பிட்டிய (Elpitiya) - அம்பலாங்கொட வீதியில் உள்ள குருந்துகஹா நகரில் இன்று (15) அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றது.
அம்பலாங்கொடையில் இருந்து எல்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் இருந்து வந்த வான் ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி, பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஆண் ஒருவர், 2 பெண்கள் மற்றும் 3 சிறுமிகள் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் காயமடைந்த ஏனையவர்கள் எல்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் உயிரிழந்த சிறுமி 6 வயதுடையவர் என்றும், குருந்துவத்த, பிடிகல பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
சிறுமியின் சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை விபத்து குறித்து எல்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
