அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் பதுக்கியுள்ள 60 பில்லியன் டொலர் - வெளியாகிய உண்மை!
"சர்வதேச நாணய நிதியம் எமது நாட்டுக்கும், மக்களுக்கும் பாதகமான நிபந்தனைகளை முன்வைக்குமாயின் அதை நாம் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை, நாங்கள் முன்வைக்கும் நிபந்தனைகளின் கீழ் கடனைத் தாருங்கள், இல்லையெனில் அந்தக் கடன் எமக்கு தேவை இல்லை."
இவ்வாறு, தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
பதுக்கியுள்ள 60 பில்லியன்
மேலும் அவர்,
"சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மூலம் எமது சந்ததியின் எதிர்காலத்தை சீர்குலைக்க நாம் தயாராக இல்லை.
ஆட்சியாளர்கள் அவர்களது நெருங்கியவர்களின் துணையோடு வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள டொலர்களே எமது நாட்டின் டொலர் தட்டுப்பாட்டிற்கு பிரதான கரணம்.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் 60 பில்லியன் டொலர் பணம் நாட்டிற்கு வரவில்லை என சர்வதேச தகவலின் மூலம் அறியமுடிகிறது.
அரசியல்வாதிகளின் ஆதரவோடு வெளிநாடுகளில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர்கள் அதை பதுக்கி வைத்துள்ளார்கள்.
சர்வதேச நாணய நிதியம் எமக்கு 2.6 பில்லியன் கடனைத்தான் தருகிறது, ஆனால் அந்த 60 பில்லியனில் 10 சதவீதத்தை கொண்டுவர முடிந்தாலே 6 பில்லியன் டொலர்கள் எமக்கு கிடைக்கும்.
இதன் ஒரு பகுதியினையாவது கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்தாலே நாட்டின் டொலர் பிரச்சனைக்கு தீர்வினைப் பெறலாம்." இவ்வாறு சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.