அம்பலமான பல மில்லியன் நிதி மோசடி - சிக்கிய முன்னாள் இராஜாங்க அமைச்சர்!
பேலியகொட மெனிங் வணிக வளாகத்தில் கடை அறைகளை வழங்குவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவர் பல மில்லியன் பண மோசடி செய்துள்ளார்.
இவர் பல்வேறு நபர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 650 மில்லியன் ரூபாய் வரை பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
10 கடை அறைகள் தருவதாகத் தெரிவித்து தொழிலதிபர் ஒருவரிடம் மட்டும் குறித்த இராஜாங்க அமைச்சர் பெருமளவு பணம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடு
பலர் பணத்தை வழங்கினாலும் அந்த வணிக வளாகத்தில் அவர்களுக்கு கடைகள் வழங்கப்படவில்லை.
பேலியகொட மெனிங் வணிக வளாகம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது.
இதனால், பாதிக்கப்பட்ட பலர் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தெனுக விதானகமகேவை சந்தித்து இது தொடர்பில் தமது முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
அவர்கள் வழங்கிய தகவலின் படி, சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இராஜாங்க அமைச்சர் தெனுக விதானகமகே அறிவித்தல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
