தொடர் கைதுகளில் சிக்கும் தமிழக கடற்றொழிலாளர்கள்!
நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 7 தமிழக கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
மயிலாடுதுறை கடற்றொழில் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சட்ட நடவடிக்கை
இந்நிலையில், கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வந்து, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடும் குற்றச்சாட்டின் கீழ் தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அத்துடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |