48 கடவுச்சீட்டுகளுடன் 70 வயது முதியவர் கைது
Sri Lanka Police
Passport
Arrest
By Jaso
நவகமுவ காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை குழுவினர், நவகமுவ காவல் பிரிவின் மேல் பொமிரியா பகுதியில் நேற்று இரவு (19) நடத்திய சோதனையில், போலி ஆவணங்களைத் தயாரித்ததாக தெரிவித்து சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.
சந்தேக நபர், மேல் பொமிரியா பகுதியின் கடுவெல பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஆவார்.
சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள்
சந்தேக நபரிடமிருந்து 48 கடவுச்சீட்டுகள், ஒரு போலி கண்டறியும் கருவி மற்றும் ஒரு கைபேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நவகமுவ காவல்துறையினர் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |