நாட்டின் அபிவிருத்திக்கு பில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீடு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளின் கீழ் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 76 பில்லியன் ரூபா நிதி குறித்து அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த நிதியை எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு முன்னர் பயன்படுத்த வேண்டுமென பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி அமைப்புகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கடந்த பாதீட்டில் இருந்து 23 பில்லியன் ரூபாவும் மாகாண சபைகளின் கீழ் அபிவிருத்திப் பணிகளுக்காக 53 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் ருவான் செனரத் (Ruwan Senarath) தெரிவித்தார்.
திறைசேரிக்குத் திருப்பி அனுப்புதல்
இந்த நிதி இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்பு அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சில உள்ளூராட்சி நிறுவனங்களில் அதிகாரத்தை நிறுவுவதில் ஏற்படும் தாமதங்கள் அபிவிருத்திப் பணிகளில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், இதுபோன்ற தாமதங்கள் தொடர்ந்தால், ஒதுக்கப்பட்ட நிதியை திறைசேரிக்குத் திருப்பி அனுப்ப வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

