“என்ன தவறு செய்தோம் - கடவுளே இலங்கையை காப்பாற்று” - 89 வயதான மூதாட்டி ஆவேசம் - (வீடியோ)
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அதனால் ஏற்பட்டுள்ள பொருள் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம் காரணமாக மக்கள் நாளாந்தம் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவற்றுக்கு தீர்வு காணும்நோக்கில் மக்கள் தற்போது வீதிக்கு இறங்கியுள்ளனர்.
அந்த வகையில் 89 வயதான இலங்கை பிரஜையான மூதாட்டி ஒருவரும் அரச தலைவர் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக இலங்கையில் இடம்பெற்றுவரும் பொதுப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஊழல் அரசியல்வாதிகளை அவர் கடுமையாக சாடியுள்ளார்.
“எனக்கு 89 வயதாகிறது. ஒவ்வொரு முறையும் இரவில் விளக்கு அணையும்போது நான் அழுவேன். நான் வயதான காலத்தில் வரிசையில் நின்று காஸ் மற்றும் பால் மா வாங்க முயற்சி செய்கிறேன். இதன் பொருள் என்ன? என்ன தவறு செய்தோம்? கடவுள் இலங்கையை காப்பாற்று” என்று அவர் தெரிவித்துள்ளார்.
"I am 89 years old, every time in the night when the light goes of I cry, I am standing in queues in my old age trying get gas and milk, what's the meaning of this, what wrong we did, God save Sri Lanka" Grand mother joins protest #SriLankaCrisis
— Azzam Ameen (@AzzamAmeen) April 6, 2022
? Sachintha Devanararana pic.twitter.com/2YgxnK2KKH
