இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 9 இந்திய கடற்றொழிலாளர்கள் படகுடன் கைது!
தலைமன்னார், உருமலை முனைக்கு அப்பால் உள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (12.08.2026) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின்போதே குறித்த கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த அவர்கள், தடைசெய்யப்பட்ட இழுவலை முறையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்திய இழுவைப்படகு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9 கடற்றொழிலாளர்கள் கைது
கைது செய்யப்பட்ட 9 கடற்றொழிலாளர்களும், அவர்கள் பயன்படுத்திய படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இதனிடையே, மன்னார் தீவு மற்றும் இராமர் பாலத்தைச் சுற்றியுள்ள மன்னார் வளைகுடா கடற்பகுதி, சர்வதேச மற்றும் உள்ளூர் மட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் கடல்சார் வளங்களைப் பாதுகாப்பதற்காக விசேட கடற்றொழில் முகாமைத்துவ மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |