வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய அரசாங்கம்: பலமிழக்கும் தேசிய பாதுகாப்பு! மைத்திரி குற்றச்சாட்டு
நிறைவேற்ற தவறியுள்ள வாக்குறுதி
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வந்த அரசாங்கம் தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளதாக முன்னாள் அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு
தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதே பிரதான யோசனையாக மொட்டு கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிடப்பட்டது.
எனினும் தற்போது வரை 3 ஆண்டுகாலமாக தேசிய பாதுகாப்புக்கு என்ன நடந்திருக்கிறது என மக்களுக்கு தெரிந்திருக்கிறது.
அரச தலைவரின் இல்லத்திற்கு தாக்குதல் நடத்தப்பட்டது.
ஏற்பட்ட குழப்பநிலை
அதன் பின்னர் அரச தலைவர் மாளிகை மற்றும் அரச தலைவர் செயலகத்தை போராட்டக்காரர்கள் சுற்றிவளைத்து போராட்டத்தில் ஈடுபடுவதுடன், பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
சாதாரண நபருக்கு அந்த பிரதேசத்திற்கு செல்ல முடியாத நிலையில் உள்ளது.
இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தலைவர்கள் கூறிய தேசிய பாதுகாப்புக்கு என்ன நடந்துள்ளது என்றும் தற்போது நாட்டில் தேசிய பாதுகாப்பு இருக்கின்றதா?
என்றும் அரசாங்கத்திடம் முன்னாள் அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.