போதைப்பொருள் கொடுத்து சிறுமி பாலியல் வன்புணர்வு - நபர் ஒருவர் கைது!
சிறுமி ஒருவருக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக கொழும்பு மத்திய காவல்நிலையத்தின், பல்வேறு குற்றச்சாட்டு பிரிவின் கீழ் சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் பதினேழு வயது சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 23 வயது நபர் சிறுமியுடன் காதல் தொடர்பில் இருந்தவர் எனக் கூறப்பட்டுள்ளது.
நபர் ஒருவர் கைது
பாடசாலைக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன்பின்னர் காவல்துறையின் தேடுதலில் ,சிறுமியும் குறித்த நபரும் விடுதி ஒன்றில் இரவு தங்கியிருந்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சிறுமியும், கைதான நபரும் 6 வருடங்கள் காதல் தொடர்பில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.