கைதுக்கு பின்னர் வெளியான ஒலிப்பதிவு! ஹரக் கட்டா விவகாரத்தில் முக்கிய புள்ளிகளின் பெயர்கள்
சட்டத்தரணி ரக்கித்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஹொரணை அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் "ஹரக் கட்டா" என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவர் நதுன் சிந்தக விக்ரமரத்னவின் மனைவி என அடையாளம் காணப்பட்ட பெண் ஆகியோருக்கு இடையிலான உரையாடல் அடங்கியதாகக் கூறப்படும் தொலைபேசி ஒலிப்பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வரும் இந்த ஒலிப்பதிவில், பொது அதிகாரிகளுக்கு பணம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளும், ஹரக் கட்டாவுக்கு உதவுவதற்கான முயற்சிகளுக்காகப் பெறப்பட்டதாகக் கூறப்படும் பணம் குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், இந்த ஒலிப்பதிவின் உண்மைத்தன்மை சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை என்பதுடன், அதில் பேசும் நபர்களின் அடையாளங்களும் அதிகாரப்பூர்வமாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
ஒலிப்பதிவு
ஹரக் கட்டா விவகாரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 120 மில்லியன் ரூபா லஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் கீழ், சட்டத்தரணி ரக்கித்த ராஜபக்ச, சரித் அபேசிங்க மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோரை லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) கைது செய்த சில மணித்தியாலங்களுக்குப் பின்னரே இந்த ஒலிப்பதிவு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்த காணொளி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |