தியாக தீபம் திலீபனின் 36ஆவது ஆண்டு நினைவையொட்டி மாபெரும் கவிதைப் போட்டி
தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்வுக்காக 1989 ஆம் ஆண்டு நல்லூரில் வீதியில் பன்னிரெண்டு நாட்கள் நீராகாரம் ஏதுமின்றி உண்ணா நோன்பிருந்து வீரச்சாவடைந்த தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவையொட்டி தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவினால் மாபெரும் கவிதைப் போட்டியொன்று நடாத்தப்படவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 9 முதல் தரம் 13 வரையான மாணவர்கள் இந்த போட்டியில் பங்குகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் கவிதைப் போட்டியானது முல்லை கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஒரு போட்டியாகவும் துணுக்காய் கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஒரு போட்டியாகவும் இடம்பெறவுள்ளது. பின்வரும் விதிமுறைகளின் அடிப்படையில் இரண்டு வலயங்களிலும் போட்டிகள் இடம்பெறும்.
50,000 ரூபாய் பணப்பரிசு

முதலில் கிடைக்கப் பெறுகின்ற விண்ணப்பதாரர்கள் 50 பேர் மாத்திரமே போட்டியில் பங்குபற்ற முடியும். குறித்த 50 பேருக்கிடையில் போட்டிகள் நடாத்தப்பட்டு முதலாம் இடத்தை பெறுபவருக்கு 50000 ரூபாய் பணப்பரிசும் இரண்டாம் இடத்தைப் பெறுபவருக்கு 30000 ரூபாய் பணப் பரிசும் மூன்றாவது இடத்தை பெறுபவருக்கு 20000 ரூபாய் பணப்பரிசும் மேலும் தலா 5000 ரூபாய் பெறுமதியான ஜந்து ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.
இந்த போட்டிகளில் பங்குபெறவிரும்பும் மாணவர்கள் 2023.09.01 தொடக்கம் 2023.09.10ஆம் திகதிக்கு இடையில் தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் குழுவின் இணைப்பாளர் முல்லை ஈசன் அவர்களது தொலைபேசி இலக்கமான 0771355770 அல்லது 0772206776 இலக்கத்துக்கு மாணவரின் முழுப்பெயர், முகவரி, பாடசாலையின் பெயர், தரம், கல்வி வலயம் உள்ளிட்ட விபரங்களை குறுந்தகவல் ஊடாகவே வட்சப் ஊடாகவே அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலதிக தகவல்களுக்கு குறித்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.