புதிய அரசாங்கம் அமைப்பு -மைத்திரி விடுத்துள்ள அழைப்பு
Maithripala Sirisena
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு புதிய கூட்டணியை உருவாக்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் வெளிப்படையாக அழைப்பு விடுப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (31) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுன சவாலில்லை

சக இடதுசாரி அரசியல் கட்சிகள் மற்றும் தமது கட்சியின் கொள்கைகளுடன் நெருக்கமாக செயற்படும் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்த முன்னாள் அதிபர், சிறிலங்கா பொதுஜன பெரமுன தமக்கு சவாலில்லை எனவும், அக்கட்சிக்கு மக்கள் ஆதரவு இல்லை எனவும் தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி