வெளிநாட்டு துப்பாக்கியுடன் இளைஞர் கைது
Sri Lanka Police
Gampaha
Sri Lanka Police Investigation
By Jaso
கம்பகா புகையிரத நிலையத்திற்கு அருகில் வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 17 தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கம்பகா குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, குறித்த துப்பாக்கியுடன், T-56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 10 தோட்டாக்கள், 2.2 மில்லிமீற்றர் அளவுடைய 7 தோட்டாக்கள் மற்றும் 4337 மி.கி ஐஸ் மருந்து ஆகியவற்றை வைத்திருந்தார்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
இந்த சந்தேக நபர் உந்துகொட, ருக்கவில பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளதுடன், சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 16 மணி நேரம் முன்
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்