பேலியகொடையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்
Sri Lanka Police
Colombo
Sri Lanka
Crime
By Raghav
பேலியகொட, வெதமுல்ல பகுதியில் நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று (19.08.2025) மதியம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
கொலை செய்யப்பட்ட நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்தக் கொலை நிகழ்ந்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த நபரின் உடல் கொழும்பு காவல்துறை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கொலையில் ஈடுபட்ட சந்தேக நபரைக் கைது செய்ய பேலியகொட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
2 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்