யாழில் நபர் ஒருவர் வெட்டிக்கொலை
யாழ்ப்பாணம் (Jaffna) – வடமராட்சி, கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் வாளால் வெட்டி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று (22.08.2025) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “வடமராட்சி, கிழக்கு சுண்டிக்குள பகுதியில் அமைந்துள்ள உடப்பு பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு சொந்தமான வாடியில் நேற்று இரவு இரு கடற்தொழிலாளர்கிடையே கைகலப்பு இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
கைகலப்பு முற்றியதில் இருவருக்கும் இடையில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்டவர் மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி வடிவேல் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவரும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 9 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்