ஒரே குடும்பத்தைச்சேர்ந்த நால்வர் மீது வாள்வெட்டு - சிறுவன் பலி
தனிப்பட்ட தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மூன்றரை வயது சிறுவன் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் தாய், பிள்ளைகள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
அயலவரே தாக்குதலாளி
மாத்தளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ரணபிமகம பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று (14) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.குறித்த வீட்டிற்கு அருகில் உள்ள நபரே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரியவருகிறது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 38 வயதான தாய், 19 வயது மகள் மற்றும் 15 வயது சிறுவன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வாளுடன் சந்தேகநபர் கைது
குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட வாளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாத்தளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
