சொல்லிசை பாடகரின் பயங்கரவாத தடை சட்ட கைது! வேடன் முதல் வாகீசன் வரை எச்சரிக்கையா.....
ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமை போராட்டத்தின் ஒரு முக்கிய அடையாளமான பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவு நிகழ்வு ஏற்பாடுகளை செய்த வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரை ஒருபுறம் சிறிலங்கா காவல்துறையின் விசாரணைக்கு அழைக்கிறது.
இன்னொரு புறத்தே கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை (ராப்) கலைஞர் சங்கீத் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தூக்கப்பட்டிருக்கிறார்.
இளையவர்களிடம் பிரபலமாகிவரும் சொல்லிசை (ராப்) பாடல்களில் தமிழர்களின் வீரஞ்செறிந்த வரலாறு சொல்லப்படுவதால் எங்கே தமிழர்களின் ஜென்சி தலைமுறை இதில் ஈர்ப்புக்கொண்டு விடுமோ என்ற அச்சத்தில் அதுவும் இல்லையென்றால் அண்மைய நாட்களில் வேடன், வாகீசன் மற்றும் ஈழத்தமிழர்களின் தாயக மற்றும் புலம்பெயர் ராப் பிரபலங்களின் ஒனறிணைவுக்கு ஒரு எச்சரிக்கையை வழங்கும் வகையில் இந்த கைது இடம்பெற்றிருக்கக்கூடும்.
கடந்த மே 18க்கு பின்னர் தென்னிலங்கை சமூகவலைத்தளங்களில் தமிழர் உரிமை வெறுப்பு சிங்கள இளைய சமூகத்திடம் நூதனமாக கொட்டப்படும் நிலையில் இந்த நகர்வுகள் நடக்கும் பின்னணியில் இந்த விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |