வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இளம் மனைவி
வீடொன்றில் தனியாக இருந்த 25 வயதுடைய இளம் மனைவி இன்று (11) மதியம் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இங்கிரிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
இங்கிரிய போதினாகல யஹலவத்த பிரதேசத்தில் வசித்து வந்த தினுஷிகா தமயந்தி ஜயசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்யே திருமணம் நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கணவர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது
உயிரிழந்த பெண்ணின் கணவர் மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது சமையலறையில் மயங்கிய நிலையில் மனைவி இருப்பதை கண்டுள்ளார். பின்னர், அவர் இங்கிரிய பிராந்திய வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த அவர் விழுந்த இடத்திற்கு அருகில் உள்ள அறையொன்றில் சுவரில் இருந்து மின்சார பிளக் ஒன்று பிரிக்கப்பட்டிருந்ததையும் காவல்துறையினர் அவதானித்துள்ளனர்.
மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளாரா
அடை மழையின் போது மின்னல் தாக்கி அவர் உயிரிழந்துள்ளாரா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவரின் திடீர் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளதுடன் காவல்துறையினர் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
