இ.போ.ச ஊழியர்கள் கடமையிலிருந்து விலகல்
Sri Lanka Economic Crisis
Strike Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Vanan
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (8) நண்பகல் 12 மணி முதல் கடமையிலிருந்து விலகியுள்ளதாக இபோச தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தங்களின் போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்கப்படாத நிலையில், அவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளளனர்.
எரிபொருள் நெருக்கடி
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் ஊழியர்கள், சேவைக்கு சமுகமளிக்க முடியாதுள்ளது. அத்துடன், சேவை நிறைவடைந்து மீள வீடு திரும்பவும் முடியாத நிலை காணப்படுகிறது.
சாதகமான பதில் இல்லை
இந்நிலையில், தாம் கடமையிலிருந்து விலகியுள்ளதாக இபோச தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். தமது கோரிக்கை தொடர்பில், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.