புத்தாண்டில் 111 பேருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
நேற்று இரவு (31) முதல் புதிய ஆண்டு விடியற்காலை வரை பல்வேறு விபத்துக்களில் காயமடைந்த 111 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அனுமதிக்கப்பட்ட 111 பேரில் 56 பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பட்டாசு விபத்துக்களில் 3பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 19 பேராக காணப்பட்டது.
சாலை விபத்துக்களில் 24 பேர், வீட்டு விபத்துக்களில் 11 பேர், பணியிட விபத்துக்களில் 9 பேர், தாக்குதல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்களில் இருந்து 21 பேர், விழுதலில் 33 பேர் உள்ளிட்ட பிற விபத்துக்களில் இருந்து 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனை வட்டாரங்களின் படி, 2020 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு விபத்துக்கள் 50% குறைந்துள்ளன.
Tags : #Accident #Sri Lanka #People