இரு பேருந்துகள் மோதி பாரிய விபத்து : பத்திற்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி
Sri Lanka Police
Colombo
Kandy
Sri Lanka
By Sathangani
கொழும்பு (Colombo) – கண்டி (Kandy) பிரதான வீதியின் வேவல்தெனிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (01) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
போக்குவரத்து நெரிசல்
இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த 15 பேரும் வரக்காபொல (Warakapola) வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தை அடுத்து குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்