காரைதீவில் விபத்து - பெண்ணொருவர் பலி! இருவர் படுகாயம்
Accident
Kalmunai
By Vanan
கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் காரைதீவு சண்முக வித்தியாலயத்திற்கு முன்னால் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியும் அறுவடை செய்த நெல்லை ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரமும் மோதியதில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு - ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த மீராமுகைதீன் பாத்தும்மா (வயது 66) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் அக்கரைப்பற்றில் உள்ள தனது மகளின் வீட்டிற்குச் செல்லும் வழியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக காரைதீவு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி