மன்னாரில் கோர விபத்து - ஒருவர் சம்பவ இடத்தில் பலி..! இருவர் படுகாயம்
மன்னார் - அடம்பன், உயிலங்குளம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (21) மாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேருக்கு நேர் மோதி விபத்து
விபத்து குறித்து மேலும் தெரிய வருகையில், அடம்பனில் இருந்து உயிலங்குளம் நோக்கி வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.
இதன்போது உயிலங்குளத்தில் இருந்து அடம்பன் நோக்கி 2 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது குறித்த இரண்டு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதன் போது உயிலங்குளத்தில் இருந்து அடம்பன் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலதிக விசாரணை
ஏனைய இருவரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த இருவரும் உடனடியாக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த அடம்பன் காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
