விஜய் மீதான விமர்சனம் : பொங்கி எழுந்த நடிகை
விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது என சொல்வதை தன்னால் ஏற்க முடியவில்லை என்று நடிகை, ஆந்திர அரசியலில் இருக்கும் நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
விமர்சிக்கிறார்கள்
பெயர், புகழ் எல்லாவற்றையும் விட்டுவிட்டு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் நேரில் சென்றாலும் விமர்சிக்கிறார்கள். செல்லாவிட்டாலும் விமர்சிக்கிறார்கள்.

நான் விஜயை சந்தித்தபோது ‘நீங்கள் ஏன் அம்மா, அண்ணி போன்ற வேடங்களில் நடிக்கிறீர்கள். உங்களை நான் இன்னும் கதாநாயகியாகத்தான் பார்க்கிறேன்’ என்று சொன்னார் விஜய். அதோடு சரி.. அம்மா, அண்ணி போன்ற வேடங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டேன்’ என தெரிவித்துள்ளார்.
திமுக மீதான விஜயின் கோபம்
இதேவேளை 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று விஜய் குறியாக இருக்கிறார். எந்த மேடையில் பேசினாலும் திமுகவை மட்டுமே அவர் அதிகமாக விமர்சனம் செய்து வருகிறார். அதுவும் கரூர் சம்பவம் அவருக்கு திமுகவின் மீது கடுமையான கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |