கணேமுல்ல சஞ்சீவ கொலை சதியின் முக்கிய சந்தேகநபர் பலத்த பாதுகாப்புடன் நாட்டுக்கு
புதிய இணைப்பு
இன்டர்போல் பிடியானையின் கீழ் ஓமானில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் சுமித்புர சதுர், 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் சந்தேக நபர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை (18) இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட கங்கனமகே திமுத்து சதுரங்க பெரேரா, என்றழைக்கப்படும் “சுமித்புர சதுர்”, குறித்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்புக்களில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப் பிரிவுக்கு (CCD) அளித்துச்செல்லப்பட்டுள்ளார். “மோதர சத்து” அல்லது “சுமித்புர சத்து” என்றும் அறியப்படும் திமுத்து சதுரங்க பெரேரா, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை
கொழும்பு 15, மோதர , சுமித்புரவைச் சேர்ந்த 38 வயதான குறித்த சந்தேகநபர், போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 2025 மார்ச் 22 அன்று ஓமானுக்குத் தப்பிச் சென்றுள்ளார்.

இந்நிலையில் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் சந்தேக நபர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட அவர், இலங்கையில் நிகழ்த்தப்பட்ட பல குற்றங்கள் தொடர்பாகத் தேடப்படும் ஒரு முக்கிய நபராகவும் கருதப்பட்டார்.
முதலாம் இணைப்பு
ஓமானில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்ட, சமித்புர சது என்று அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த நபர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

சமித்புர சது இன்று (18.08.2026) காலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர்.
மட்டக்குளி பகுதியை சேர்ந்தவரும், இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு உள்ளவருமான 28 வயதான நபர் சமீபத்தில் ஓமானில் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |