இலங்கைக்கு கிடைக்கப்போகும் 200 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி
இலங்கைக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவி நிதியுதவிப் பொதியை ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) அங்கீகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் இலங்கையைத் தாக்கிய 'டித்வா' சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்கும் மற்றும் புனரமைக்கும் பணிகளுக்காகவே இந்த அவசர நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பக்கபலமாக இந்த நிதி பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறு விவசாயிகள்
இந்த நிதியுதவியில், வங்கியின் சாதாரண மூலதன வளங்களிலிருந்து வழங்கப்படும் 100 மில்லியன் டொலர் வழக்கமான கடனும், 100 மில்லியன் டொலர் சலுகைக் கடனும், மற்றும் திட்டச் செயலாக்கம், தயார்நிலை, மற்றும் தர உறுதிப்பாட்டை வலுப்படுத்த உதவும் வகையில் வழங்கப்படும் 500,000 டொலர் தொழில்நுட்ப உதவி மானியமும் அடங்கும்.

குறித்த திட்டமானது, சேதமடைந்த வீதி மற்றும் நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளைச் சீரமைப்பதற்கும், பாதிக்கப்பட்ட சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், மற்றும் கடுமையாகச் சேதமடைந்த அல்லது அழிக்கப்பட்ட வீடுகளின் புனரமைப்புக்கு ஆதரவளிப்பதற்கும் முன்னுரிமை முதலீடுகளுக்கு நிதியளிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்