ஜனாதிபதிக்கு ஏற்படப்போகும் ஆபத்து : கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்கிறார் நாமல்
நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை நீடிக்கும் முடிவிற்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை தெரிவித்தால் ஜனாதிபதி எவ்வாறான ஆபத்தை எதிர்கொள்வார் என்பதை தன்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆலோசனை வழங்கும் நீதிபதிகளின் பெயர்களை வெளியிடுங்கள்
நீதித்துறை சம்பந்தமாக ஜனாதிபதி யாரிடம் ஆலோசனை கேட்டதாகக் கூறப்படுகிறதோ அந்த சிரேஷ்ட நீதிபதிகளின் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும்.

ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் சிரேஷ்ட நீதிபதிகள் யார் என்பதை அறிய விரும்புகிறேன். "தற்போது ஜனாதிபதி, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் ஒரு விஷயத்தில் வெளிப்படையாக ஒரு தன்னிச்சையான முடிவை எடுக்கிறார்.
ஜனாதிபதிக்கு ஏற்படப்போகும் ஆபத்து
நாட்டின் சட்டத்தரணிகள் சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.நீதிபதிகளும் இதனை எதிர்த்தால், பொதுச்சபை சட்டத்தரணிகள் சங்கம், ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவை இந்தத் திருத்தத்தை எதிர்த்தால், ஜனாதிபதி என்ன ஆபத்தை ஏற்பார் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

ஆனால், ஆபத்தைப் பொருட்படுத்தாமல், ஜனாதிபதி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கப் போராடுவதாகத் தெரிகிறது," என்று நாமல் ராஜபக்ச கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |