வலுக்கும் வர்த்தக போர்...! இந்தியா மீது ட்ரம்ப் மற்றுமொரு அதிரடி வரி விதிப்பு
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாய விளைபொருட்கள் மீது கூடுதல் வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகின்றது.
இந்தநிலையில், ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அரசு கடுமையான வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பேச்சுவார்த்தை
இதன் தொடர்ச்சியாக தற்போது 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இரு தரப்பும் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க அமெரிக்க டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவசாய உற்பத்தி
இந்திய விவசாய உற்பத்தி பொருட்கள் அமெரிக்க சந்தையில் குறைவான விலையில் கிடைப்பதால் உள்ளூர் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, இந்திய விவசாய பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க ட்ரம்ப் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாய உரங்கள் மீதும் கூடுதல் வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |