விஜயதாச மீதான மனு ஒத்திவைப்பு
சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் (Sri Lanka Freedom Party) தலைவராக விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) மற்றும் பதில் செயலாளர் நாயகமாக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தமை சட்டவிரோதமானது என தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேன்முறையீடுகள் மூன்றாவது நாளாகவும் ஆராயப்பட்டுள்ளன.
இந்த மேன்முறையீட்டு மனு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவினால் (Duminda Dissanayake) கொழும்பு மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரித்து உத்தரவு ஒன்றை வெளியிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு இன்று மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
மேன்முறையீடு
இந்த மனு, கிஹான் குலதுங்க மற்றும் பிரேங்க் குணவர்தன ஆகியோர் அடங்கிய சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் மீண்டும் அழைக்கப்பட்டது.

இதன்போது, பிரதிவாதி துமிந்த திஸாநாயக்க சார்பில் ஆஜரான அதிபர் சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர மேலதிக சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
இதையடுத்து, மேலதிக சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக எதிர்வரும் 31ம் திகதிக்கு மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |