முன்கூட்டியே தகவல் வழங்கிய அமெரிக்க உளவுத்துறை: பெரும் குழப்பத்தில் விசாரணை அதிகாரிகள்!
கடந்த ஆண்டு ஒக்டோபரில் ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுமார் 50,000 கிலோகிராம் ரசாயனங்கள் கொண்ட இரண்டு கொள்கலன்கள் இலங்கை துறைமுகத்திற்கு வருவதாக அமெரிக்க உளவுத்துறை முன்கூட்டியே தகவல் அளித்தாக தெரியவந்துள்ளது.
காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திற்கே இந்த தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்குத் தேவையான ரசாயனங்கள் கொண்ட இரண்டு கொள்கலன்களிளும் அந்த ரசாயனங்களை பாதுகாக்க இன்சுலேடிங் என்ற பொருள் நிரப்பப்பட்டிருந்ததாகவும் அதன்போது கூறப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட ரசாயனங்கள்
அதன்படி, இன்சுலேடிங் என்ற பொருளே புதைக்கப்பட்டுள்ளதாகவும் கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரசாயனங்கள் வேறு இடத்திற்கு கடத்தப்பட்டடிருக்கலாம் என தற்போது அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், போதைப்பொருள் ரசாயனங்கள் கொண்ட இரண்டு கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட விதம் குறித்து கடுமையான குழப்பம் உருவாகியுள்ளதாக விசாரணைக் குழுக்கள் கூறியுள்ளன.
ஆனால், இந்த இரண்டு கொள்கலன்களும் கடந்த ஜனவரி மாதம் வெளிவிடப்பட்டதாக கூறப்படுகிறது, அந்த நேரத்தில் நாட்டில் கடுமையான கொள்கலன் நெரிசல் இருந்தது.
323 கொள்கலன்கள் விவகாரம்
இவ்வாறானதொரு பின்னணியில், துறைமுகத்தில் கொள்கலன் நெரிசலுக்கு மத்தியில் விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில் டன் கணக்கில் போதைப்பொருள் இருப்பதாக எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தின் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
எவ்வாறாயினும், சர்ச்சையை ஏற்படுத்திய சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில் இந்த இரண்டு கொள்கலன்களும் உள்ளடங்கவில்லை என்று காவல்துறை அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
