ராஜதந்திர உறவுகளை ரணில் சீர்குலைப்பதாக கண்டனம்
ரஷ்ய விமானம் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம்
ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான ஆழமான உறவுகளை அச்சுறுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ரஷ்ய விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சம்பவத்தினால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
மறைமுக சக்தியாக அமெரிக்கா
இந்த நிலையில், இந்த விடயத்தில் ஒரு மறைமுக சக்தியாக அமெரிக்கா செயற்பட்டதான பாணியிலான மறைமுக கருத்து ஒன்றை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் டியூ குணசேகர முன்வைத்துள்ளார்.
இதில் இந்தியா அல்லது அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில், ஒரு பக்கத்தில் நிற்பது ஆபத்தானது என அவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு செய்தி சொல்லியுள்ளார்.
அத்துடன் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் மறைந்துள்ள அரசியல் சக்திகளை ரணில் விக்ரமசிங்க தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.