இரவோடு இரவாக கிராமத்திற்குள் புகுந்த ஆயுததாரிகள் - பலர் படுகொலை!
மேற்கு ஆபிரிக்க நாடான வடக்கு புர்கினா பாசோவில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசாங்க பேச்சாளர் தெரிவித்துள்ளார் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎல் ஆகியவற்றுடன் தொடர்புடைய போராளிகள் உள்ள எல்லைப் பகுதிகளில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடையில் செனோ மாகாணத்தின் குறித்த பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவோடு இரவாக Seytenga கிராமம் தாக்கப்பட்டதை அடுத்து, இராணுவம் இதுவரை 50 உடல்களைக் கண்டுபிடித்துள்ளது என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தள்ளது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை இந்த தாக்குதலைக் கண்டித்துள்ள அதேவேளை நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.