அனுமதி கிடைத்தால் ஐபிஎல் தொடர் தொடரும் : வெளியான தகவல்

Pakistan India Indian Premier League World War III
By Raghav May 10, 2025 05:00 PM GMT
Report

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து, அனுமதி கிடைக்குமாயின் எஞ்சிய போட்டிகளை நடத்துவதற்கு மூன்று இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மாதம் 22ஆம் திகதி நடைபெற்ற பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கியழித்துள்ளது. 

இதனையடுத்து, ஆபரேஷன் பன்யான் மர்சூஸ் (Operation Bunyun Al Marsoos) என்ற பெயரில், இந்தியா பகுதிகளில் மீது பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டது.

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஐபிஎல் போட்டி

பஞ்சாப் தர்மசாலா மைதானத்தில், பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையில் ஐபிஎல் போட்டி நடைபெற்று கொண்டிருந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் பஞ்சாப் எல்லை பகுதிகளில் தாக்குதல் நடாத்தியது.

அனுமதி கிடைத்தால் ஐபிஎல் தொடர் தொடரும் : வெளியான தகவல் | After India Pak Ceasefire Ipl 2025 Resumption

இதையடுத்து போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டு, ரசிகர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். போர் பதற்றம் அதிகரித்த நிலையில், ஐபிஎல் போட்டிகளை, ஒரு வாரத்திற்கு ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்தது.

இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்வதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட நிலையில், மீண்டும் ஐபிஎல் போட்டிகள் எப்போது ஆரம்பமாகும் என்கின்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

போர் நிறுத்தத்தின் எதிரொலி : மீளத் திறக்கப்பட்டது பாகிஸ்தானின் வான் எல்லை

போர் நிறுத்தத்தின் எதிரொலி : மீளத் திறக்கப்பட்டது பாகிஸ்தானின் வான் எல்லை

இந்திய அரசாங்கம்

இவ்வாறான பின்னணியில் , ஐபிஎல் தொடரை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து, அனுமதி கிடைக்குமாயின் எஞ்சிய போட்டிகளை நடத்துவதற்கு தென்னிந்தியாவின் மூன்று இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அனுமதி கிடைத்தால் ஐபிஎல் தொடர் தொடரும் : வெளியான தகவல் | After India Pak Ceasefire Ipl 2025 Resumption

குறித்த தொடர் இந்த மாதத்தில் மீண்டும் தொடங்கப்படுமாயின், மீதமுள்ள 16 போட்டிகளையும் பெங்களூரு, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூன்று இடங்களையும் தயார் நிலையில் வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய சூழலில் போட்டிகளை விரைவாக மீண்டும் தொடங்குவதில் சில சிக்கல்கள் உள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவிக்கிறது. 

அனுமதி கிடைத்தால் ஐபிஎல் தொடர் தொடரும் : வெளியான தகவல் | After India Pak Ceasefire Ipl 2025 Resumption

போட்டித் தொடர் இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்ட உடனேயே, அணிகள் கலைந்து செல்லத் தொடங்கியதுடன், பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் இன்றைய தினத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

போட்டி இடைநிறுத்தம் நீடிக்கப்படுமாயின் வேறு கிரிக்கெட் தொடர்களில் பங்குபற்றும் ஒப்பந்த வீரர்கள் மீண்டும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும் என அணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

உலகின் முதல் ட்ரோன் யுத்தம் : வான் பரப்புகளில் அட்டகாசம் செய்யும் இரும்பு பறவைகள்

உலகின் முதல் ட்ரோன் யுத்தம் : வான் பரப்புகளில் அட்டகாசம் செய்யும் இரும்பு பறவைகள்

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

அதிகரிக்கும் போர் பதற்றம் : முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர கூட்டம்

அதிகரிக்கும் போர் பதற்றம் : முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர கூட்டம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025