கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பேராதனை பல்கலையில் நடந்த கொடுமை! வெளிச்சத்துக்கு வந்த தகவல்
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட மாணவர்களை பகிடிவதைக்குட்படுத்திய 70 மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைகழக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பேராதனை பல்கலைகழகத்தின் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பீடத்தின் மாணவர்களே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மாணவர்களை சிரேஸ்ட மாணவர்கள் குழுவினரே இவ்வாறு பகிடிவதைக்குட்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இம் மாணவர்களின் பொறுப்பற்ற நடவடிக்கை காரணமாக கொரோனா பரவியுள்ளதென அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்ட மாணவர்களை மருத்துவமனைக்கு செல்லவேண்டாமென சிரேஸ்ட மாணவர்கள் எச்சரித்ததுடன் அவர்களை பல்கலைகழகத்திலேயே தங்கியிருக்குமாறும் கூறியுள்ளனர்.
இதன் காரணமாக பல்கலைகழகத்தில் வைரஸ் பரவியுள்ளதாக தெரிவித்த அதிகாரியொருவர், இதனை தொடர்ந்து இந்த 70 மாணவர்களுக் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.