இந்திய அகதி முகாம் போராட்டங்களுக்கு மத்தியில் ஈழத் தமிழ் பெண் சாதனை
ஈழத்தைப் பூர்வீகமாக கொண்டவரும் இந்திய அகதி முகாமில் வசிக்கும் தமிழ் பெண்ணான பர்சானா என்பவர் இந்தியாவில் வழக்கறிஞராகி சாதனை படைத்துள்ளார்.
தன்னுடைய சாதனைப் பயணம் குறித்து பர்சானா தெரிவித்ததாவது, "என்னுடைய மூதாதையர் 1980 காலப்பகுதியில் இந்தியாவிற்கு அகதிகளாக வந்திருந்தனர்.
இராமேஸ்வரத்தில் பிறந்த நான் சிறிது காலத்திற்கு பின்னர் கன்னியாகுமாரியில் இருந்த அகதிகள் முகாமில் வசித்து வந்தோம்.
சட்டக்கல்லூரியில் அனுமதி
இந்தக் காலப்பகுதியில் பாடசாலைக் கல்வியை முடித்துவிட்டு பட்டப்படிப்பை தொடர்வதற்கு எந்தவொரு வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இவ்வாறிருக்கும் போது பல போராட்டத்திற்கு மத்தியில் தான் பட்டப்படிப்பை தொடரவேண்டிய நிலை இருந்தது.
இந்த நிலையில் சட்டக்கல்வியைப் படிக்குமாறு முகாமில் இருந்தவர்களின் ஆலோசனைக்கமைய படிக்க முயற்சித்த போது ஈழத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் குடியுரிமை இல்லாத காரணத்தினாலும் சட்டக்கல்வியைப் கற்பதற்கு எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அப்போது தான் எனக்கு அகரம் கைகொடுத்தது. தனியார் கல்லூரி ஒன்றில் அனுமதி பெற்றுக்கொடுக்காமல் எனக்கு அனுமதி வழங்க முடியாது என்று குறிப்பிட்ட திருநெல்வேலி அரச சட்டக் கல்லூரியில் எனக்கு அனுமதி வாங்கிக் கொடுத்தது.
அங்கே 5 வருடம் சட்டக்கல்வியைப் படித்து 2019இல் நிறைவுசெய்து தற்போது 5 வருட அனுபவத்துடன் சிறந்த வழக்கறிஞராக இருப்பதுடன் தனியாக வழக்குகளையும் நடத்தி வருகின்றேன்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
