ஏர் இந்தியா விமான விபத்து! வெளிநாடொன்றில் இருந்து வெளியான அறிக்கையால் பரபரப்பு

India Italy World Air India
By Dilakshan Feb 12, 2026 12:29 PM GMT
Report

கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி அகமதாபாத் நகரிலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலிருந்த மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த துயரச் சம்பவத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும், தரையில் இருந்த 19 பேரும் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.

ஆரம்ப கட்ட விசாரணையில், விமானம் புறப்பட்டதும் அதன் இரண்டு இயந்திரங்களுக்கும் செல்லும் எரிபொருள் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

சீனா, பாகிஸ்தான் பதற்றத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நகரும் இந்திய திட்டம்

சீனா, பாகிஸ்தான் பதற்றத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நகரும் இந்திய திட்டம்


விமானியின் திட்டமிட்ட செயல்

விமானத்தின் தலைமை விமானி கேப்டன் சுமித் சபர்வாலும் இந்த விபத்தில் உயிரிழந்தார். எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சை விமானியே அணைத்ததால் விபத்து ஏற்பட்டதாக சில அமெரிக்க ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஏர் இந்தியா விமான விபத்து! வெளிநாடொன்றில் இருந்து வெளியான அறிக்கையால் பரபரப்பு | Ahmedabad Plane Crash Reason Italian News Report

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்தது. மேலும் தனது மகனின் பெயருக்கு சேதம் விளைவிக்கப்படுவதாக கூறி, கேப்டன் சபர்வாலின் 91 வயது தந்தை, சுயாதீன விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தை அணுகியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இத்தாலிய நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி அறிக்கை புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில், இந்த விபத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அல்ல மாறாக விமானியின் திட்டமிட்ட செயலால் ஏற்பட்டடுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி, விமானம் புறப்பட்ட 32 விநாடிகளுக்குள் எரிபொருள் சுவிட்சுகள் கையால் அணைக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக இயந்திரங்கள் செயலிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவறுதலாக நடந்த ஒன்று அல்ல என விசாரணையில் தெரியவந்ததாகவும் அந்த செய்தி கூறுகிறது.

அறிக்கைக்கு மறுப்பு

மேலும், அமெரிக்காவின் வாஷிங்டனில் ஆய்வு செய்யப்பட்ட காக்பிட் குரல் பதிவு தரவுகளை மேற்கோள் காட்டி, கேப்டன் சபர்வாலே இயந்திரங்களை அணைத்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏர் இந்தியா விமான விபத்து! வெளிநாடொன்றில் இருந்து வெளியான அறிக்கையால் பரபரப்பு | Ahmedabad Plane Crash Reason Italian News Report

போயிங் 787 ட்ரீம்லைனர் வகை விமானத்தின் இரண்டு இயந்திரங்களும் ஒரே நேரத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக செயலிழப்பது மிகவும் அபூர்வம் என அமெரிக்க நிபுணர்கள் கருத்து தெரிவித்ததாகவும் அந்த செய்தி அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தநிலையில், இந்த குற்றச்சாட்டுகளை கேப்டன் சபர்வாலின் குடும்பத்தினரும் விமானிகள் சங்கங்களும் கடுமையாக மறுத்துள்ளனர்.

விமான தயாரிப்பு நிறுவனம் மற்றும் விமான சேவை நிறுவனத்தை பாதுகாக்கும் நோக்கில் உயிரிழந்த விமானிகள்மீது பழி சுமத்தப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வெளிநாட்டு நாணயத்தில் பணப் பரிவர்த்தனை! மத்திய வங்கி வெளியிட்ட எச்சரிக்கை

வெளிநாட்டு நாணயத்தில் பணப் பரிவர்த்தனை! மத்திய வங்கி வெளியிட்ட எச்சரிக்கை

கனடா பாடசாலையில் இடம்பெற்ற கோர துப்பாக்கிசூடு : சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்

கனடா பாடசாலையில் இடம்பெற்ற கோர துப்பாக்கிசூடு : சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...   
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022